Thursday, 8 October 2015

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து 150 நட்சத்திர அபூர்வ ஆமைகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மலேசிய தலைநகர் கோலாலம்பூரை சேர்ந்த பயணியிடம் இருந்து, கடத்தி வரப்பட்டவை என கூறப்படும் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, 28 வயதுடைய தமீம் என்பவர், பாதுகாக்கப்பட்ட வனவாழ் உயிரினம் ஆன நட்சத்திர ஆமைகளை கைப்பை ஒன்றில் வைத்து தூக்கி வந்துள்ளார்.

இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர் என கூறியுள்ளனர்.  அதன்பின் அந்த ஆமைகள் வன துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன என அவர்கள் கூறியுள்ளனர்.  தமீமை வன துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment