Friday, 9 October 2015

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தகவல்



மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேருக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திமுகவில் யாருக்கு செல் வாக்கு அதிகம் என்பது தொடர் பான கருத்துக் கணிப்பு வெளி யானதால், மதுரை தினகரன் நாளி தழ் அலுவலகம் மீது 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர் வினோத், கோபி, பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, டி.எஸ்.பி. ராஜா ராம் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்தனர். இதை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 9.12.2009-ல் விசாரித்து, அட்டாக் பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்தது.
இந்நிலையில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த வினோத்தின் தாயார் பூங்கொடி மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்து, அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கும் தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் தங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக வசதி யாக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண் டனர்.
பின்னர் ‘இந்த வழக்கை நடத்த சிபிஐ தயாராக உள்ளதா’ என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு ‘தயாராக இருப்பதாக’ சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் பதிலளித்தார். ‘இந்த வழக்கை சிபிஐ எப்படி நடத்தப்போகிறது, வழக்கின் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டனர். எந்த இடத்தில் இருந்து வழக்கைத் தொடங்கப் போகிறீர்கள்’ என நீதிபதிகள் கேட்ட னர்.
அதற்கு, ‘நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் எதிரி களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க சிபிஐயிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன’ என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
நிபுணர்கள் சான்று தேவை
‘புகைப்படங்கள், வீடியோக் களை எப்படி ஆதாரங்களாக எடுத் துக்கொள்ள முடியும். முன்பு புகைப் படத்தின் நெகட்டிவ் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப் பட்டது. தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி டிஜிட் டல் உலகில் புகைப்பட நெகட் டிவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. தகவல் உரிமைச் சட்டத்தின் 6-வது பிரிவின் படி மைக்ரோ சிப் மற்றும் நானோ சிப்களை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியும். அவற்றை ஆதாரங்களாக எடுத் தாலும், அது உண்மையானதுதான் என்பதை ஆய்வு செய்து நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். அவ்வாறு சான்றளித்த பிறகும் அதை சாட்சியமாக எடுத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
வீடியோக்களை பொறுத்தவரை அதில் இடம்பெற்றுள்ள நபரின் உருவம், அவரது பேச்சு ஆகிய வற்றை ஆய்வுசெய்து அதன் உண்மைத் தன்மை குறித்து நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். அதன் பிறகே அதை சாட்சியமாக எடுக்க முடியும்.
சிபிஐ சர்வதேச அளவில் விசாரணை நடத்தும் அமைப்பு. எனவே இதுபோன்ற ஆதாரங்களைத் தர வேண்டும்.
அண்மையில் உயர் நீதிமன்றத் தில் ஒரு வழக்கில் ஆணும், பெண் ணும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படம் தாக்கல் செய்யப்பட் டது. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது சந்தேகம் ஏற்பட் டது. சம்பந்தப்பட்ட பெண் நீதி மன்றத்தில் ஆஜராகி அதுபோன்று புகைப்படம் எதுவும் தான் எடுத்துக்கொள்ளவில்லை என்றார். இதுபோன்று நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தகவல் உரிமைச் சட்டப் படி சாட்சியங்களை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதில் சரியான புரிதல் இல்லை என்றார். பின் னர் அடுத்த விசாரணையை அக். 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment