Friday, 9 October 2015

புத்துயிர் பெறுகிறது ம.தி.மு.க - கட்சியில் போட்டி போட்டுக் கொண்டு இணையும் தமிழின மக்கள்


ம.தி.மு.க வில் இருந்து கட்சி நிர்வாகிகள் விலகியதாக அதிகளவில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பேசப்பட்டு வந்த காலம் போய், தற்போது ம.தி.மு.க கட்சியில் அதிகளவில் இணைந்து வருகின்றனர் என்ற செய்தி ம.தி.மு.க வினரிடையே புத்துணர்ச்சி பெற வைத்துள்ளது.
வைகோ தலைமையில் ம.தி.மு.க கழகத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்
சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமைக் கழகம் தாயத்தில் (நேற்று) 08.10.2015 தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைர், துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார்.

No comments:

Post a Comment