Tuesday, 6 October 2015

லாரிகள் வேலை நிறுத்த எதிரொலியா ? காலாவதியான 7 சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு தமிழக அரசு உறுதி






லாரிகள் வேலை நிறுத்த வாபஸ் பெற்றதற்கு பிறகு தற்போது தமிழக அரசு காலாவதியான 7 சுங்க சாவடிகளை அகற்றுவதற்கு தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
காலாவதியான 7 சுங்கச் சாவடிகளை அகற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தமிழக அமைச்சர் தங்கமணியை இன்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தில் உள்ள காலாவதியான 7 சுங்கச் சாவடிகளை அகற்றுவது குறித்து முடிவெடுக்கக் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் முருகன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment