ஒடிசாவில் விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை வீசியதில் 9 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கொடாலா பகுதியில் பெகுனியாபடா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்று கிழமை விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சம்பவத்தின்போது, அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை வீசியுள்ளனர். இதில் காயமடைந்தவர்களில் 4 பேர் எம்.கே.சி.ஜி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முன் பகை காரணம் என போலீசார் கூறியுள்ளனர். சிலைகளை கரைப்பதற்கு முன் நடனம் ஆடுவது குறித்து அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவும் காரணம் ஆக இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என கொடாலா காவல் நிலையத்தின் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கல்பனா கன்ஹாரா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment