பாஜக கூட்டணி சார்பில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால் அவரின் கட்சி பிஹாரைத் தவிர வேறெங்கும் இல்லை என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலை முன்னிட்டு, சுபால் பகுதியில் கட்சித் தொண்டர் களிடையே அவர் நேற்று பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதிஷ் குமார் நமக்கு துரோகம் செய்தார். பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக அவர் பாஜகவுடனான கூட்டணியை 2013-ல் முறித்துக் கொண்டார். அவரை நாம் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால், அவரின் கட்சி பிஹாரில் மட்டும்தான் உள்ளது. வேறெங்கும் இல்லை. கடந்த 1990-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தி தொடரில் வரும் முங்கெரி லால் கதாபாத்திரத்தைப் போல நிதிஷ் பகல் கனவு காண்கிறார்.
பாஜகவுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது மட்டுமின்றி, தொடர்ந்து தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட லாலுவுடன் சேர்ந்து கொண்டு முதுகிலும் குத்தி விட்டார்.
காட்டாட்சி நடத்திய லாலுவு டன் சேர்வதன் மூலம் நிதிஷால் பிஹாரில் எவ்வித வளர்ச்சியையும் கொண்டு வர முடியாது. பிஹாரில் உயர் கல்வி அமைப்புகள் இல்லை, வேலைவாய்ப்புகள் இல்லை, தரமான மருத்துவ சேவைகள் இல்லை என்பதால் கல்வி, வாழ்வா தாரம், மருத்துவம் என அனைத்து அத்தியாவசியங்களும் மக்களிட மிருந்து விலகியே இருக்கின்றன.
சுதந்திரத்துக்குப் பிறகு பிஹாரை 40 ஆண்டுகள் காங்கிர ஸும், 15 ஆண்டுகள் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 10 ஆண்டுகளாக ஐக்கிய ஜனதா தளமும் ஆண்டன. இந்த ஆட்சிகள் பிஹாரை பின்னுக் குத் தள்ளி சீரழித்து விட்டன. பிஹாரில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால், பிஹார் தேசத் தில் முதல் மாநிலமாக மாற்றப் படும். பிஹாரின் வளர்ச்சிக்காக பாஜக கூட்டணி அனைத்து முயற்சிகளையும் செய்யும். வேலைவாய்ப்புக்காக பிஹார் மக்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி செல்ல வேண்டியதிருக்காது.
ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மீண்டும் பிஹாரில் காட்டாட்சிதான் அமையும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


No comments:
Post a Comment