Tuesday, 6 October 2015

பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் இந்திய, ஆசிய மற்றும் உலக சாதனை நிகழ்வு 4 ம் வகுப்பு மாணவி சாதனை


பரணிவித்யாலயா பள்ளி 4-ம் வகுப்பு மாணவி ரக்ஷனாவின் முதலுதவி பயிற்சி அளிக்கும் செயலை சேவையாகவும், மூன்று இந்திய, ஆசிய மற்றும் உலக சாதனைகளும்        1). 50,000 பேருக்கு நேரடியாக சென்று முதலுதவி பயிற்சி அளித்தல்,  2). 25 பள்ளி, கல்லூ¡¢களுக்கு ஒரு பள்ளிக்கு 20 புத்தகம் வீதம் மொத்தம் 500 முதலுதவி பயிற்சி புத்தகம் இலவசமாக கொடுத்தல்,3).19 வகையான முதலுதவி பயிற்சியையும் 1 மணி 30 நிமிடத்தில் தொடர்ந்து செய்முறை பயிற்சி விளக்கம் கொடுத்தல் ஆகிய சாதனைகளின் தொடக்க நிகழ்ச்சி பரணி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பரணிவித்யாலயா பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதிமோகனரெங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். மயக்கவியல் மருத்துவர் Dr.K.செல்வம் M.B.B.S.,M.D.,அவர்களும், அரசு மகப்பேறு மருத்துவர் Dr.K.தீபா M.B.B.S.,D.G.O அவர்களும் முன்னிலை வகித்தனர். பரணிவித்யாலயா பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் முதலுதவி பயிற்சி விளக்க பிரச்சார வாகன ஆம்புலன்ஸையும், பரணி வித்யாலயா பள்ளியின் மாணவர்களுக்கு கொடுக்கும் முதலுதவி பயுற்சியையும் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமராவதி மருத்துவமனையின் தமைமை மருத்துவர் Dr.N.வேலுசாமி M.D  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் முதலுதவி புத்தகத்தை வெளியிட்டார்.

இன்று தொடங்கிய புதிய உலக சாதனை நிகழ்ச்சியின் போது நீலப் பறவை ஆர்.ரக்சனா, (இந்திய, ஆசிய, உலக சாதனையாளர்) பேசியது .....
"அன்றொரு நாள் எங்க ஸ்கூல் அச்செம்ப்ளியில் முதலுதவி பற்றி பயிற்சி கொடுத்த எங்க பிரின்சிபால் சார்,
சரியான நேரத்தில்செய்யும் முறையான முதலுதவி மூலம் உயிர்போகும் அபாயத்தில் இருப்பவரையும் காப்பாற்ற முடியும். விபத்துகளில் இறப்பவர்களில் 75 சதவீதம் பேர் சரியான முதலுதவி கிடைக்காததால் மட்டுமே இறக்கிறார்கள். ஒவ்வொரு மாணவரும் முதலுதவி பயிற்சிபெற்று மற்றவருக்கு உதவ வேண்டும். நமது சேவையை, உழைப்பை, திறமையை, சாதனையை நமதுதாய்நாட்டிற்கு சமர்ப்பணம்செய்யவேண்டும், என்று சொன்னார்.
பள்ளியில் கற்றுக்கொண்டமுதலுதவியை ஒருநாள் வீட்டில் அம்மா கையில் ரத்தக்காயம் ஏற்பட்ட போது பயன்படுத்தினேன். அம்மாவிற்கு உடனே சரியானது.
இதைபார்த்த என் அப்பா என்னை, டாக்டர்களான எனது மாமா, அத்தை இருவரிடமும் கூட்டிப்போனார். அவர்கள் எனக்கு முதலுதவி குறித்து இன்னும் சிறப்பாக பயிற்சி அளித்தனர்.
நான் கற்றுக்கொண்ட முதலுதவி பயிற்சியை குறைந்தது ஐம்பதினாயிரம் பேருக்காவது கொண்டு சேர்க்க வேண்டும்.
அதனால் தான் இந்த முதலுதவி பயிற்சி சேவை பயணத்தை தொடங்கி இருக்கேன்.
எங்க பிரின்சிபால் சார், மேனேஜ்மென்ட், டீச்சர்ஸ், அப்பா, அம்மா எல்லோருக்கும் என் நன்றி.
நம்ம நாட்டுக்காக தொடர்ந்து சேவை செய்வேன்." என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் S.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். பரணி வித்யாலயா பள்ளி துணை முதல்வர் R.பிரியா நன்றியுரையாற்றினார். இந்நிகழச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர்  M.சுரேஷ்  செய்திருந்தார்.

புகைப்படம்: அமராவதி மருத்துவமனையின் தமைமை மருத்துவர் Dr.N.வேலுசாமி M.D  அவர்கள் முதலுதவி புத்தகத்தை வெளியிட, பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன் பெற்றுக்கொள்ள, பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் சாதனையை துவக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment