Saturday, 12 September 2015

கரூரில் பரணி பார்க் சாரணர் மாவட்டம் மாநில முதன்மை ஆணையர் விருது முகாம்

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவருமாகிய மு.ராமசாமி அவர்கள் வழிகாட்டுதலில், பரணி பார்க் சாரணர் மாவட்ட மாநில முதன்மை ஆணையர் விருது முகாம் கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில் 11.09.15 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.இம்முகாமிற்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட முதன்மை ஆணையர் எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட சாரணீய ஆணையர் பத்மாவதி மோகனரங்கன்முன்னிலை வகித்தார்.
பரணி பார்க் மாவட்ட சாரண ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றுகையில், “முதலுதவி பயிற்சி, ஆக்கல் கலை,  சீருடை அணி திறன், கலைத் திறன்கள், அணி வகுக்கும் திறன் போன்ற பல்வேறு திறன்களின் அடிப்படையில் மாணவர்களின் திறன்கள் சோதிக்கப்பட்டன.இம்முகாமில் 339 குருளையர் மற்றும் நீலப்பறவையர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி மாநில முதன்மை ஆணையர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். 10 வயது குழந்தைகளுக்கு மாநில அளவில் வழங்கக்கூடிய விருதுகளிலேயே “மாநில முதன்மை ஆணையர்” விருதே  மிக உயாரிய விருதாகும் என்றும்,  இவர்கள் அனைவருமே தேசிய விருதான "கோல்டன் ஏரோ" விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்”  என்றும் கூறினார்.
இம்முகாமில் பாரத சாரணர் இயக்க மாநில தலைமையகத்தில் இருந்து தேர்வு அலுவலர்களாக பூர்ண சந்திரன் மற்றும் கீதா ரவீந்திரன் ஆகியோர் மாணவர்களின் திறமைகளை மேற்கூறிய பல்வேறு தலைப்புகளில் சோதனை நடத்தினர்.
இவ்விழாவிற்கு பரணி பார்க் மாவட்ட துணை ஆணையர்(சாரணர்) எஸ்.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை ஆணையர்(சாரணர்) கே.சேகர் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் மாவட்ட துணை ஆணையர்(சாரணர்) எம்.சுரேஷ், செயலர் ஆர்.பிரியா, மாவட்ட துணை ஆணையர்கள், மாவட்ட அமைப்பு ஆணையர்கள், மாவட்ட பயிற்சி ஆணையர்கள்,  துணை செயலாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

புகைப்படம்: மாநில முதன்மை ஆணையர் விருது முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்து தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள குருளையர் மற்றும் நீலப்பறவைகளுக்கு பரணி பார்க்  மாவட்ட சாரண ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்து கூறுதல்.

No comments:

Post a Comment