Saturday, 12 September 2015

சிம்லாவின் மலை ரயில் தடம் புரண்டது விபத்தில் வெளிநாட்டினர் இருவர் பலி என தகவல்




இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கல்கா-சிம்லா ரயில் வழித்தடத்தில் இயங்கும் மலை ரயிலின் 4 சிறிய பெட்டிகளை சுற்றுலாப்பயணிகள் வாடகைக்கு எடுத்து  அதில் பயணம் செய்து கொண்டிருந்தனர். 

இந்த ரயில்  கல்கா ரயில் நிலையத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.விபத்துக்கான கரணத்தை கண்டறிய உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டி முழுமையாகவும் மற்றொரு பெட்டி லேசாகவும் தண்டவாளத்தை விட்டு விலகியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடும் குளிரையும் பாராமல் விபத்துகள் குறித்து தீவீர விசாரணை அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment