Sunday, 13 September 2015

தமிழகம் மதுவில்லா தமிழகத்தை த.மா.கா உருவாக்கும் ஜி.கே.வாசன் நம்பிக்கை



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை,  தூத்துக்குடி மாவட்ட கட்சி  சார்பில் பாளை மார்க்கெட் திடலில்  நேற்று தேசிய திருவிழா என்ற பெயரில் 20 அம்ச திட்ட அறிமுக விழா நடந்தது. இதற்கு தமாகா துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இதில் ஜிகே.வாசன் பேசியதாவது: இந்த கூட்டம் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் 80 சதவீதம் வெற்றி பெறும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மாநில காங்கிரசுக்கு அமைதியாக, அடக்கமாக நடக்கவும் தெரியும். மற்ற கட்சிகளுக்கு ஈடாக ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தவும் தெரியும். தமாகா தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் கணிப்பு வேறு.

தமாகா காமராஜர், மூப்பனார் வழியில் தொண்டர்களை நேசிக்கக்கூடிய இயக்கம். தியாக தலைவர்களான செல்லபாண்டியன், கே.டி.கோசல்ராம், ஆறுமுகம், மஜீத் போன்றவர்களின் தியாகத்தை மதிக்கிற இயக்கம். ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல மக்கள் குறைகளையும் கேட்டு அதனை நிவர்த்தி செய்ய பாடுபடுவோம். மதுவில்லா தமிழகம், மாசில்லா சுற்றுச்சூழல், தடையற்ற மின்சாரம், ஊழல் இல்லா அரசு நிர்வாகம், கொள்ளை போகாத இயற்கை வளம், ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். 

இந்த 20 அம்ச திட்டம் நமது வரைபடத்தில் இருக்கிற புள்ளிகள். இதை வைத்து நாம் கோலம் போடவேண்டும். தமிழகத்தில் கடும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. மின்தடை, வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும் என நாம் வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். மது இல்லாத தமிழகத்தை தமாகா உருவாக்கும். நமது கடின உழைப்பு 2016 தேர்தலில் வீண்போகாது. இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment