Saturday, 12 September 2015

அன்னா ஹசாரே அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீர் ரத்து பரபரப்பு



காந்திய வழியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட அண்ணா ஹசாரே, கருப்புப் பணப் பதுக்கல், மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டம் போன்றவற்றை எதிர்த்தும், வலிமையான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காந்தியவாதி அன்னா ஹசாரே, காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் நடத்தப்போவதாக அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே தகுதி - ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதாலும், நில ஆர்ஜித சட்டத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளதாலும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்து, கைவிட்டதாக அன்னா ஹசாரே இன்று தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் இந்த தீடீர் ரத்துவினால் சமூக நல ஆர்வலர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment