மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பத்மபூஷன் விருதிற்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் அவர் மார்ட்டினா ஹிங்கிசுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து உலக தரவரிசையில் முதல் இடத்தில் வகித்து வருகிறார்.
சானியா ஜோடி தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
தற்போது நாட்டின் மிக உயர்ந்த 3-வது விருதான பத்மபூஷன் விருதை பெற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.இந்த விண்ணப்பத்தை கடந்த மாதம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சானியா மிர்சாவோடு மல்யுத்த வீரர் சுசில்குமார், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோரும் பத்ம விருதுக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
சானியா மிர்சா தனது 19--ம் வது வயதில் பத்மஸ்ரீ விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment